நான் 70 களில் போட்ட கோலம்!

 ஒன்று..
யாருக்கும் பொருந்துமா? பாருங்கள்.ரி.கிருஷ்ணன்
பாடியது
———————————————————————
நீதான் என்னை நினைத்தாய்….
நெஞ்சில் ஆசையை வளர்த்தாய்..
தேனே என்று அழைத்தாய்….
ஏனோ இன்று வெறுத்தாய்….

கடிதம் பல நீ வரைந்தாய்…
காதலை அதில் நீ தந்தாய்…
இதயம் உனதே என்றாய்…
இன்பம் வேண்டி நின்றாய்….

மலரும் மணமும் போலே
மண்ணில் வாழ்வோம் என்றாய்..
மறந்தே இன்று போனாய்…உன்
மனதில் விலங்கை போட்டாய்…

நிலவில் என்னுடன் இருந்தாய்..என்
நிழலை தொடர்வேன் என்றாய்..
நிஜத்தை இன்று மறந்தாய்…
நிம்மதியை நீ குலைதாய்

 ஆக்கம் கவிஞர் கோவிலுர் செல்வராஐன்