அகில உலக சைவமாநாடு இன்று 11.08.2017

அகில இலங்கை சைவமகா சபை முன்னெடுக்கும் அகில உலக சைவமாநாடு இன்று 11.08.2017 நல்லூா் சிவன் கோவிலில் இருந்து ஊா்வலத்துடன் ஆரம்பமாகி யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் பக்தி இயக்க மீள்எழுச்சியில் இளைஞா்களின் பங்களிப்பு என்ற பொருளில் ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ மற்றும் மதிசுதன் ஆகியோா் தலைமையில் இடம்பெற்ற அரங்கிற்கு நெறிப்படுத்துநராக நான் பங்கு கொண்டேன். மேடையில் தென்கயிலை ஆதீனம் அகத்தியா் அடிகளாா், இளையபட்டம் திருமூலா் அடிகளாா், தமிழகம் பேரூர் ஆதீனத்தில் இருந்து வருகை தந்த மருதாசலம் அடிகளாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வுகளை சைவமகா சபை செயலாளா் மருத்துவா் பரா. நந்தகுமாா் நெறிப்படுத்தினாா். 12.08.2017 சனிக்கிழமையும் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் மாநாடு நடைபெறும். இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பத்து மாவட்டங்களில் இருந்து அதிகளவான இளைஞா்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Merken