அச்சம் தவிர்….!


கண்ணில்
கடமைகளை
காட்சிகளாக்கு
நெஞ்சினில்
தேவைகள
உறுதியாக்கு….!

எண்ணித்
துணிந்தால்
விண்ணிலும்
பறக்கலாம்.
மண்ணின்
வலிகளைத்
தாங்கி எழு..!

விடியல்
விருந்துக்கு
வருவதில்லை
தேடி ஓடிக்
கூடிக் கூட்டிவா
ஆடிப் பாடிக்
களிக்கலாம்.
அழைத்து வா.!

அச்சம் தவிர்
பட்சம் வை
உச்சம் தொட
உண்மையை
உழைப்பாக்கு
கைகளைப் பற்று
குரலை உயர்த்து
வானம் சிவக்கும்
வையம் வசப்படும்.

கவிஞர் ரி.தயாநிதி