அது புலி வீரம்தானே!

வீரம் வீரம் வீரம் மாவீரம்
அட அது புலி வீரம்தானே!
சினம் கொண்டு
பகை வென்றிட
புயலனெ எழுந்து
புலியென புறப்பட்ட வீரம்
அட அது புலி வீரம்தானே!
கரும்புலியாய் வெடித்து
கயவனை கதி கலங்க வைத்த
வீரம் அது புலி வீரம்தானே!
கடற்புலியாய் கரு மேகம் சூழ
பொங்கி எழுந்த வீரம்
அட அது புலி வீரம்தானே!
வான்புலியாய் வையகம் வியக்க
புறப்பட்ட மாவீரம் புலி வீரம்தானே!
மண் மானம் காக்கவே
மலையென எழுந்து
தேசியத் தலைவன்
ஆணையிலே
இலட்சியம் கொண்டு
சத்தியம் செய்து
புத்தனின் தேசத்து
சித்தம் கெட்ட சாபங்களை
அழிக்க புறப்பட்ட வீரம்
அட அது புலி வீரம்தானே!
புலி வீரர்களின்
தியாகம் உணர்ந்த
ஒவ்வொரு தமிழனும் புலிதானடா
நீயும் நானும் தமிழன் என்பதில் பெருமைதானடா
புலி வீரர்கள் இலட்சிய கனவை
வென்று கொடுப்போமடா
அதை சத்தியம் செய்து கொள்வோமடா!

  • சத்தியமூர்த்தி பாமினி *