Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 இனிய நந்தவனம் இலக்கியத் திருவிழா – stsstudio.com

இனிய நந்தவனம் இலக்கியத் திருவிழா

இனிய நந்தவனம் 23 ஆம் ஆண்டு விழா சாதனை மாணவர்கள் விருது வழங்கும் விழா நூல் வெளியிட்டு விழா என முப்பெரும் விழாவாக திருச்சியில் ஜனவரி 5 அன்று சிறப்பாக நடைபெற்றது வி. ஜி.பி நிறுவனம் துணைத் தலைவர் இரா .தங்கையா தலைமையில் .லிம்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனர் எம்.சாதிக் பாட்சா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இயக்குநர் மு.களக்கியம் , கவிஞர் சக்திஜோதி, இலங்கை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் கனடா குமார் தம்பியப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாககக் கலந்து கொண்டனர் .ஆபுபக்கர் சித்திக் . விஜய் வீத்தாராமன் , கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிளர்

தமிழகம் மற்றும் இல்லங்கை ,கனடாவைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு சாதனை மாணவர் விருதுகள் வழங்கப்பட்து கரூர் சுமதி குழும உரிமையாளர் ரத்தினம் அவர்களின் உழைப்ப்பைப் பாராட்டி உழைப்புக்செம்மல் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது

இனிய நந்தவனம் பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் எழுதிய கூர்காவின் விசில் சத்தம் கவிதை நூலும் நான் கண்ட இந்தோநேசியா பயணக் கட்டுரை நூலும் கவிஞர் பா.தென்றலின் உயிர் பருகும் மழை கவிதை நூலும் வெளியிடப்பட்டது
நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
முன்னதாக நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்க கவிஞர் பா.தென்றல் நிகழ்வை அழகாக தொகுத்து வழங்கினார்