Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 இலங்கை தமிழ் நாடகமும்…5 – stsstudio.com

இலங்கை தமிழ் நாடகமும்…5

இங்கு படத்தில் இருப்பவர்.மிகவும் புகழ் பெற்ற ஒரு பகுத்தறிவாளர்..இந்தியாவின் கேரள திருவனந்தபுரம் திருவெல்லா என்ற ஊரில் 10 – 04 -1898 இல் பிறந்து சிறந்த கல்விமான் ..Colombo Thurstan college Botanic teacher…Dr.Abraham Kovoor…18.9.1978 ஸ்ரீ லங்காவில் காலமானார்…இவர் காலத்தில் புட்டபத்தி சாய் பாபா.கையில் விபூதியும்..வாயில் லிங்கமும் எடுத்த காலம்….இவர் கூட பல இடங்களில் அதை செய்து காட்டியவர்..யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி மண்டபத்திலும் இதை செய்து காட்டியவர்…இவரது இந்த திறமை திரு.வேலணை வீரசிங்க்ததையும் கவர்ந்தது…அவரும் திராவிட கழக ஆதரவாளர்..எனக்கும் பழக்கமானார்…நான்..அமரர் .கணேசபிள்ளை அண்ணை..வீரசிங்கம் அன்னார சகிதம்.இவர் மனைவி இறந்ததை அறிந்து சென்றோம்…ஆச்சரியம்..அந்த மரண வீட்டில் யாரும் இல்லை ..ஒரு மகன் அவரும் வரவில்லை…இறந்த அவர் மனைவியின் உடல் எந்த அலங்காரமும் இன்றி வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்தது… அருகில் யாரும் இல்லை ..மேல்மாடியில் கோவூர்.. எமக்கு மனதை உறுத்தியது..என்ன சொல்ல..வருத்தம் சொல்லவா..வாய் திறக்கும் முன்னர் கை காட்டினார்…சொன்னார் 50 ஆண்டு காலம் என்னோடு வாழ்ந்தா..இன்னும் சிறிது நேரத்தில் போதனா வைத்தியசாலை நபர்கள் வந்து கொண்டு செல்வார்கள் என்று..இப்போ இவர் மீது சாதுவாக எனக்கு பயம் வந்து விட்டது என்றே சொல்லலாம்…
அது சரி ..இவருக்கும் எமது நாடகத்திற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா…இவர் ஒரு மனோ தத்துவ டாக்டரும் கூட….இவர் வாழ்வில் ஒரு நோயாளிக்கு நடந்த உண்மை கதை..நம்பிக்கை… என்ற பெயரில் நாடகமாக உருவானது..மிக அருமையான கதை..
இந்த நாடகத்தில்…ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆபிரகாம் கோவூராக.. எதிர் மறை மந்திரவாதியாக நான்…கபட தபால் காரனாக கே.எஸ்.பாலச்சந்திரன்…வெளிநாடு சென்ற கணவனை எதிர்பார்த்து ஏங்கும் மனைவியாக மணிமேகலை ராமநாதன்…பெற்றோராக.. எஸ்.எஸ்.கணேசபிள்ளை ..சந்திரபிரபா மாதவன்….இதில் பேய் பிடித்த மணிமேகலைக்கு பேய் விரட்டும் காட்சி..நானும் மணிமேகலையும் உடுக்கு வாத்தியத்துக்கு கற்ப்பூர சட்டியியுடன் ஆடும் ஆட்டம் மக்கள் ஆர்வத்துடன்..குழந்தைகள் அழுகுரல் பயத்தில்… கொழும்பை தொடர்ந்து யாழ்ப்பாணம் படி தொட்டி எங்கும்… இ.போ.ச.பஸ் தொடங்கி..டாக்ஸி வரை எனதும்..மணியின் படமும் தான்… ஒருமுறை தீச்சட்டி தடம் புரண்டு என் மேல் கொட்டியது..இந்த நாடகம் வடமாகாணத்தில் பல இடங்களில் நடந்தாலும்…கொடிகாமம் மகா வித்தியாலயத்தில் நாடகம்..முன்னர் தலைமை ஆசிரியர் இந்த நாடகத்தை பார்த்துள்ளார்..என்னிடம் வந்து சொன்னார் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்..இந்த மாமரதிலை காய்க்கிற காய் ஒண்டையும் பெடியள் விடுறாங்கள் இல்லை ..நீங்கள் பேயாடி ஒரு மரத்தில் பேயை ஆணி அறைந்து கட்டுவீர்களே..அதை இந்த மரத்தில் செய்யுங்க என்றார்.. அதன் படி நானும் செய்தேன்…இரண்டாண்டுகளுக்கு பின்னர் எதேச்சையாக அவரை கண்டேன்.. சொன்னார் பொடியள் அந்த மரத்தடி பக்கமே போவதில்லை என.இப்படி… படித்ததற்கு நன்றி//