ஆச்சாரம்….கவிஞர் தயாநிதி

இல்லாத
ஒன்றுக்காய்
ஊர் கூடிப்
போராட்டம்.
ஆச்சாரம்
ஆச்சாரமென
ஆர்ப்பாட்டம்.

கோவிலில்
சாதிக் கலவரம்
தேர் வடம்
இராணுவக்
கரங்களில்
இன்றைய நிலவரம்.

விடுதலைப் போர்
காலங்களில்
மௌனித்த
பெரும் கூத்து
மீண்டும் கட்டறுத்து
சதிராடுதாம்.

ஊரிழந்தோம்
உறவிழந்தோம்
உடமைகளிழந்தோம்
உயிரிழந்தோம்
பயிரிழந்தோம்
பண்பாடிழந்தோம்
பள்ளியிழந்தோம்
படிப்பிழந்தோம்
தமிழன் என்ற
துடிப்பிழந்தோம்
கும்பிட்ட கோவிலும்
இழந்தோம்.விரைவில்
எல்லாமே இழப்போம்
இதுவே தமிழன் நியதி.

ஆக்கம் கவிஞர்தயாநிதி