*உயிர்த்துவருகிறார்*


கவலை வேண்டாம்
மீட்ப்பர் இதோ வருகிறார்
சென்ற ஆண்டில் இதேநாளில்
கொடிய மனிதமிருகங்கள்
தேவாலயங்கள்மீது
குண்டுகள் போட்டனர்
இன்று மனிதனோ
வீட்டுக்குள் அங்கிவிட்டான்
இறைமகனை மறந்த
கொடியவர்களே!பாவிகளே!
இனியாவது திருந்துங்கள்
அல்லது அழிந்துவிடுங்கள்
இதோ உயிர்த்துவருகிறார்
இறைமகன் யேசுபிரான்
இனி எல்லாம் நன்மையே
இறைவா அறியாமல்
செய்தபிழைகளை மன்னிப்பீராக
அன்போடு எம்மை அரவணைப்பீராக
எல்லா உயிர்களும் உம்மை
தேடுதையா வணங்குதையா
அவர்களை ஆசீர்வதிப்பீராக
இதுவே தருணம் வாருமையா
மக்களைக்காத்திட வந்திடய்யா
தேவன்கோயில் மணிஓசை
காதில் கேட்கிறது
ஞானஒளி கண்ணில்தெரிகிறது
இனி நாளும் இங்கே இன்பமே


(மயிலங்காடுஇந்திரன்)