கடல்!! கவிதை கவிஞர்

பனைமரங்கள்
குனிந்து தரையை
முத்தமிட்டன
இதை பார்த்த சில
பச்சிளம் விழிகளையும்
பிதுக்கி வெளியெடுத்த நாள்
இந்நாள்
வடுக்களின் வரலாற்றுப் பதிவு

அரிப்பெடுத்த இரு
கவசத்தகடுகள்
ஒன்றன்மீது ஒன்று ஏறியதால்
வந்த அவலம்

காக்க மறந்த கடவுள்
கருணையற்ற காலை
பெரும் நம்பிக்கைத் துரோகம்
பிள்ளையைத் தின்னும் தாய்

எல்லாமே மொத்த ரூபமாய்
கடல்!! கடல்!! கடல்!!

– அனாதியன்