கனவு..,



இடை
வெளி ஒதுங்கிட
மன வெளி
மகிழ்ந்தது..
உனக்காக
ஒரு சொல்லை
நினைத்தேன்
பொருள் நீ..
நெஞ்சில்
ஓர் தீப்பொறி
பற்றி படர்ந்தது
சுவாலை சுடரானது.
உனக்காக
ஒரு பூவை
பறித்தேன்
எண்ணம் விரிந்தது.
தூரம் நகைத்தது.
எழுது
எழுதுவென
உள் மனம்
அழுத்தம் தந்தது..
பட்டாம் பூச்சி
இறக்கை விரித்தது.
வானம்
வளைந்து
மையம் கொண்டது
வையத்தில்
நீயும் வாலியென்றது
வலியும் பறந்தது..
விரலிடுக்கில்
பேனா நுழைந்தது.
மனவிடுக்கில்
அடங்கிய வார்த்தைகள்
வடிவம் கட்டியது.
வெண்தாள்
ஆடைகளின்றி
வெறும் மேனியாக
காட்சி தர
செங்கலம்
மோகம் தீர்த்து கொண்டது.
அழகிய
கவிதை பிரசவம்…..
கனவு எனும்
பெயர் சூடப்பட்டது.

ஆக்கம் கலைஞர்
ரி .தயாநிதி