காதல் செய்வீர்..


நினைவுகளின்
அக அசைவில்
ஆனந்தம்…
உண்மை
உறவுகளின்
உள்ள உராய்வில்
உன்னத பந்தம்
கனவுகளின்
காட்சிகளில்
கண நேர இன்ப
பொறி மயக்கம்..
கலைந்திடும்
கனவுகளால்
மனம் தளர்ந்து
கனதி தயக்கம்
சினத்தலும்
சீண்டலும்
தனகலும்
பார்வையின்
குழப்பங்கள்.
நேசங்களும்
நேர்த்தியும்
மனங்களின்
உற்பத்தியில்..
கவர்ச்சியிலும்
கருணையிலும்
கரையுடைப்பதல்ல
உண்மைக் காதல்.
கண் வழியிறங்கி
இதயத் தரையில்
தழைப்பதுவே
மனித காதல்..
தெய்வீகம்
என்றதன் மெய்ப்
பொருள் அதுவாகலாம்.
ஆகையால்
காதல் செய்வீர்.
காதல் செய்வீர்.

ஆக்கம் கவிஞர் தயாநிதி