***கைநிறையக் காசு***

பொய் தவிர்த்துப் பேசிப்பார் –
பொங்கிவரும் நின்மதி ,ஆறாய் ,
மெய்தனித்தே பேசுமகனே ,
மகிழ்வு வரும் உனைத்தேடிநேராய் .
கைநிறைய காசுதான் உலகில்,
கலக்கலான வாழ்க்கை என்பது,
பைநிறைய பணம் பறித்தோரின்,
பகட்டான பேச்சுக்களில் ஒன்றாகும் .
கைவண்டியிழுத்து கிடைக்குமந்த
கால்ப்பணமாகிலும். அப்பணம்
மெய் வலிக்க நீயே உழைத்த .
மேன்மையான உனது பணமாகும்.
பொய்ப்பித்தலாட்டமெல்லாம்,
பலநாளுக்கில்லை என்பதும்,
கைக்கூலி வாழ்க்கையானது ,
கன நாளுக்கில்லைஎன்பதும்
வையகத்தில் பலருக்கும் உணர
வைக்கவேண்டிய உண்மையாகும் .
மெய் நேசன்