கோவிலூர் செல்வராஜன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது


கடந்த (27.04.2019) அன்று அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில்
அக்கினிக்குஞ்சு எட்டாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 
மாபெரும் இசை நிகழ்ச்சியும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் 
வழங்கப்பட்டன. பல்துறைக் கலைஞர்,முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூடுதாபன  
பாடலாசிரியர்,மெல்லிசை பாடகர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் 
நாடக நடிகர் என்று பல துறைகளிலும் தனது முத்திரையை பதித்தவர்  
கோவிலூர் செல்வராஜன் அவர்கள்,புலம்பெயர்ந்த பின்னரும் தனது 
கலை இலக்கிய முயற்சிகளை கைவிடாமல் அவற்றின் உபாசகராகவே 
இருந்து வருகின்றார்.திரு கோவிலூர் செல்வராஜனுக்கு பல மேற்குலக
நாடுகளில் பல விருதுகள் கிடைத்துள்ளன, கடைசியாக கடந்த 2017 ஆண்டு கனடா  
  உதயன் விருது கிடைத்தது. இப்பொழுது அவுஸ்திரேலியாவில் இவர் முத்தமிழுக்கும் 
ஆற்றிய,ஆற்றிக்கொண்டு இருக்கின்ற பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் 
விருது  அந்த நாட்டில் உள்ள அக்கினிக்குஞ்சு குழுமத்தினரால் வழங்கப் பட்டிருக்கின்றது.