நினைவின் இருக்கையில் நீ…கவிதைகலைஞர் தயாநிதி

உடை பட
முடியாத பெரும்
தடைகள்.
நடை முறைக்
கணக்கோடு…

விடையில்லா
வினாக்கள்
வியாபாரமில்லாமலே
கடைக் கணக்கில்..

வாழ்வின்
பெரும் பகுதி
வாழாமலே
கழிகின்றது.

வெற்று நில
வேளாண்மை
அறுவடைக்கு
காத்திருப்பு..

வேடிக்கை
விளைச்சலாகி
மடை உடைத்த
கண்ணீரே
காணிக்கை..

நினைவின்
இருக்கையில் நீ
இருக்கையில்
கனவின் கை
இருப்பில் ஏதுமில்லை..

மனத் தடைகள்
உடை பட்டால்
அடை பட்ட
கதவுக்குள்
ஆனந்தம் பிரசவ

கலைஞர் தயாநிதி