படைப்புக்கள்!கவிதை ஜெசுதா யோ

வரிகள் வாசிப்பதற்கு மட்டுமே
வரையறையில்லாத வரிகளாக
கவியும் இங்கே கடந்து போகிறது..

காலங்கள் மாற
கவித்துவமும் அழகுபெற
புதிதாக பல கவிஞர்கள்
சிறப்போடு பல படைப்புக்கள்
வரையறையின்றி வகைபாடி
வசனம் போலவும் வந்து போகிறது…

உள்ளமனது இயம்ப
வெளிமனது தளம்ப
இரண்டும் சேர்ந்த கலவையாக
எடுத்தியம்புது பல புதுக்கவிகள்…

சமூகமும் மக்களும்
அதனுள் வாழும் கவிகளும்
அற்புதம் அற்புதம்
ஆணும் பெண்ணுமாய்
இரண்டு கலவையாய்
காதலும் இங்கே….

அழகழகாய் ஆயிரம் கவிகள்
அழுகை பாதி, சிரிப்பு மீது
சிதைந்து போன உள்ளங்கள் பாதி
சேர்ந்து வாழ்ந்த மனங்கள் மீதி
அப்பப்பா எதைச் சொல்ல நான்,..

வரையறையின்றி எழுத
வார்த்தைகள் வரமறுக்கிறது
நெஞ்சாங்குழிக்குள்
நெருடல்களாக
நெஞ்சை விட்டு வர மறுக்கிறது…

அத்தனை அற்புத படைப்பின்
அங்கமாக
நாளும் பொழுதும் பவனிவரும்
பல நூல்கள் பார்த்து
பரவசம் அடைந்தேன்
வாழ்த்தியும் நிற்கிறது உள்ளம்..

ஆக்கம் ஜெசுதா யோ