பிரான்சில் நடைபெற்ற கலைத்துறைப்பட்டமளிப்பு விழா.

அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தாலும், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தாலும் நடாத்தப்பட்ட கலைத்துறைப் பட்டமளிப்பு நிகழ்வு எனது வாழ்நாளில் ஒரு பேறாகவே கருதுகின்றேன். காரணம் நாங்கள் சின்னவயதிலே கிட்ட நெருக்க முடியாது எட்ட நிற்று பார்த்து ரசித்த பிரபல்யமான நடன ஆசியர் கலாபூசணம் திரிபுரசுந்தரி யோகானந்தன் அவர்களை இங்கு அழைத்து வந்ததும், அவர்கள் அருகில் இருக்கும் பேறு பெற்றதும், எங்கள் குழந்தைகளுக்கும், எங்கள் தாய்மண்ணையும் , மக்களையும், அதன் விடுதலையையும் நேசித்து உழைக்கும் ஆசிரியர்களையும் வாழ்த்தி ஆசி வழங்கவும் என்னாலும் எனது நண்பன் சேயோனாலும் ஒரு சந்தர்பமும் ஏற்படுத்திக் கொடுக்க கிடைத்தமைக்கும் எம் கண்கண்ட தெய்வங்களை கரம்தொழுது வணங்குகின்றேன்.