பிரான்ஸில் 26.05.19 அன்று „பிடிமண் „திரைக்குவருகிறது

பிரான்ஸில் 26.05.19 அன்று திரைக்குவருகிறது
திருமலையூரான் S.அசோக்குமாரின் எழுத்து இயக்கத்தில் உருவான முழுநீள திரைப்படம்
„பிடிமண் „பாரிஸின் பல முன்னணிக்கலைஞர்-
களிளுடன் தமிழகக் கலைஞர்களும் தொழில்நுட்பத்தில் கைகோர்த்திருக்கிறார்கள்.

இயக்குநர் திருமலையூரான் தமிழகத்தில் பல காலம் வாழ்ந்தவர். திரைத்துறை சார்ந்த சகலதரப்பினருடனும் நட்பை பேணி வருபவர். 
அதன் சாட்சியாக இவரது படைப்பு வெற்றி பெற
பலரது வாழ்த்துக்கள்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருவதை அவதானிக்க முடியும்.

திருமலையூரான் அவர்களின் எண்ணமெல்லாம் இதுதான் நம்மவர் படைப்புக்களை தமிழக ரசிகர்களையும் கவரும் வகையில் கொண்டு செல்லவேண்டுமென்பதாகும். எது எப்படியோ அவரது படைப்பு அந்த வழியை திறந்தால் மகிழ்வானதே :::: 
பிரான்ஸில் முற்றுமுழுதாக படமாக்கப்பட்ட நமது கலைஞர்கள் நடித்த „பிடிமண் „என்ன சொல்கிறது என்பதை அறிய நம்மவர் படைப்புக்கு ஆதரவு வழங்க 26.05.19 ஞாயிறு
18.00மணிக்கு 
C G R CINEMAS PARIS LILAS
PLACE DU MAQUIS DU 
VERCORS 75020
Metro. Porte de LiLas
Bus. 170,105,249,129,61,115,
„உலகெங்கும் எமது மண்ணின் கமழும் கலைக்காற்று வீசட்டும் „அது நம்மவர்களின் ஆற்றல்களை பேசட்டும் „
ஒளிப்படங்களில் இயக்குநர் திருமலையூரான், லண்டன் அங்கிள் அருணகிரிநாதன், பாடகி,நடிகை தர்ஷினி,,T.ஜஸ்ரின், கே.பி.லோகதாஸ் ஆகியோர் :::::: (K.P.L)