பேச மறுப்பதா..!

பேச மறுப்பதா
பேச்சை இழப்பதா
வாச மலரின்
பாசம் அறுப்பதா
இல்லை
உதிரும் பூக்களின்
வலிகள் சுமப்பதா?
என் கனவின்
உருவம் சிதைந்ததா
காதல் வெளியில்
என்னைச் சுடுவதா
மலர் மாலை அணிவதா
இல்லை மலர் வளையம்
ஏற்பதா?
உயிரின் வேரிலே
உறுதி குலைவதா
உலகின் திசைகளில்
உறங்கிப் போவதா
மங்கல நாணிலே
சாபம் வீழ்ந்ததா
உன் மடிமீது நானுறங்க
காலம்தான்
பதில் சொல்லுமா
இல்லை
வலிகள்தான் சாட்சி
சொல்லுமோ?
பாமினி சத்தியமூர்த்தி