முகநுாலும் நானும் !கவிதை அ.பவளம் பகீர்

 

எனக்குள் இருப்பதை
ஏனோ உன்னோடுதானே
கொட்டித் தீர்ப்பதடி
ஏமாற்றத்தை
எழும் கோபத்தை
சில சந்தோஷங்களை
இன்னும் ஏராளம்
நீ பேச மறுத்தாலும்
என் பேச்சை
கூர்ந்து கேட்கிறாய்
அதனால் கொஞ்சம்
எனக்கும் ஆறுதல்தானே
உன்னோடு பேசுவதை
சிலர் (like) விரும்புகின்றனர்
பலருக்கு (angry) பிடிக்கவில்லை
இன்னும் சிலர்
ஏளனம் (hahaa) செய்து போகின்றனர்
சடுதியாக கண் விழித்திடும்
நொடிப் பொழுதெல்லாம்
உன்னை பார்த்திட தோணுதடி
தூக்கம் கண்ணை பறித்தாலும்
உன்னை ஒருமுறை
பார்த்த பின்புதான்
மீண்டும் துயில்கொள்கின்றேன்
சத்தியமாய் பலமுறை
உன்னை பார்க்கவேகூடாதென
உறுதியானதொரு முடிவும்
எடுத்திருக்கின்றேன்
ஆனாலும் அத்தனை தடவையும்
தோற்றும் இருக்கின்றேன்
அலாரம் அடித்து
அவசரத்தில் எழுந்தாலும்
ஏனோ திரும்பவும்
உனை பார்த்துவிட்டுதானே
கடமைகளுக்கு போவதுண்டு
இப்போது பார்த்திட நினைத்தாலும்
ஏனோ உன்னை
பார்க்க முடிவதில்லை
காரணத்தை சொன்னாலும்
நீ நம்பிட போவதில்லையடி
உன்னோடு பேசிட
வார்த்தைகள் ஆயிரம்
என்னுள் நிரம்பிக் கிடக்கின்றதே
கடவுச்சொலை(Pass word)
தொலைத்துவிட்டு இப்போ
ஏனோ பார்த்திட முடியாமல்
சில வார்த்தைகளேனும்
பேசிடவும் முடியாமல்
மனமது உடைந்தபடி கடந்து போகின்றேன்…!!

 

அ.பவளம் பகீர்.

Merken