யாதுமாகி…


இருண்ட
வானம்
திரண்ட இருள்
களைந்து
ஏதோ சொல்கின்றது…
வறண்ட
மனங்களில்
வார்த்தைகள்
சாரமிழந்து
ஏதுமற்று தவிக்கின்றது…
வசந்த
காலம் நோக்கி
பறவைகளின்
சுதந்திர பறப்பு
களிப்புடன் நடக்கின்றது..
பட்டுப் போன
மரங்களும்
கிளை விட்டு
விழுந்த சருகுகளும்
விறகாகி உரமாகி
மனிதனுக்கு உதவுகின்றது.
இவன் மட்டும்
மீழ முடியாமல்
முறண்பட்டு வாழ்வில்
பிடிமானம் விடுபட
இதயம் துடிக்கின்றது..
எண்ணிக்கையில்
எண்ணங்களில்லை.
எழுந்து ஆகாயம் பார்
அழகான மாற்றங்களை
உன்னுள்ளும் உருவாக்கு..
உயர்வும் காத்திருக்கின்றது..

ஆக்கம் கவிஞர் தயாரிதி