லண்டன் புங்குடுதீவு காற்றுவெளிக்கிராமம் 2019 நிகழ்வு‘ கலைவாழ்க்கைகும் புது உத்வேகத்தை கொடுத்தது கோகுலன்,

லண்டன் புங்குடுதீவு காற்றுவெளிக்கிராமம் 2019 நிகழ்வு‘ மனதுக்கும் என் கலைவாழ்க்கைகும் புது உத்வேகத்தை கொடுத்த நிகழ்வாக அமைந்துவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி ‚ இன்நிகழ்வில் நான் பங்குபெறக்காரணமான எனதருமை அன்ரி சித்தப்பா ‚ லண்டன் புங்குடுதீவு சங்கத்தலைவர் பிறேம் அண்ணா அன்பு சுதனண்ணா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ‚ மிகச்சிறப்பான முறையில் நேர்த்தியான முறையில் நிகழ்வினை ஒழுங்குபடுத்தி நடத்திமுடித்த நிர்வாகத்தினரின் உழைப்பினை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.சிறப்பாக ஊரை முன்னேற்றும் எதிர்காலத்திட்டங்களுடன் நிகழ்வினை நடாத்தியமை இன்னும் சிறப்பு ‚ இந்நிகழ்வில் என்னோடு இணைந்து பாடிய முகேஸ் அண்ணா, பிரியா ஹேமஸ் அக்கா , நம்நாட்டு பாடகி கனடா ஸ்ருதிஹா மிகச்சிறப்பாக பிண்ணணி இசை வழங்கிய பகி அண்ணாவின் ரெம்போ இசைக்குழுவிற்கும் என் நன்றிகள்“ தொடர்ந்து நிகழ்விலே கலந்துகொண்டு அன்பையும் ஆதரவினையும் வழங்கிய எம்தமிழ் உறவுகளுக்கும் ஊர்ச்சொந்தங்களுக்கும் என் அன்போடு கூடிய நன்றிகள் ‚ எதிர்காலத்தில் சிறப்பாக ஊர்த்தேவைகளை பூர்த்தி செய்கின்ற பிரமாண்டமான நிகழ்வில் எம்தேசக்கலைஞர்களுடன் சந்திப்போம் ‚ என்றும் அன்போடு : கோகுலன் சாந்தன்