வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில். வைகாசிப்பொங்கல் நாயகி….. என்கின்ற இறுவட்டு வெளியீட்டு இசைய சாய்தர்ஷன்

13.06.2022 இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலோரம் வீற்றிருந்து அருள் கடாட்சம் வழங்குகின்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில்…. „வைகாசிப்பொங்கல் நாயகி….. என்கின்ற இறுவட்டு வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்த இரு வெட்டில் ஐந்து பாடல்களையும் பாடி வெளியீடு செய்துள்ளார் திருமதி ரஞ்சனி சிவகுமார் அவர்கள். இதற்கான இசையை வழங்கி இருக்கின்றார் எமது நாட்டின் முன்னணி இசையமைப்பாளர் கண்ணன் மாஸ்டர் அவர்களுடைய அன்பு புதல்வர் பல தென்னிந்திய திரைப்படங்களுக்கு இசையமைத்து எமது மண்ணின் பெருமையை பறைசாற்றும் ஒரு சிறந்த இசையமைப்பாளர் எனது அன்புக்குரிய நண்பர் திரு சாய்தர்ஷன் அவர்கள் இன்று மாலை 4 மணிக்கு மிகச் சிறப்பாக வற்றாப்பளை கண்ணகி அம்மனின் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது இருவெட்டினை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் மிக விரைவில் கலைத் தரிசனம் யூடியூப் சேனலில் பார்க்க முடியும்..

அன்பு உறவுகளே. கலந்து கொண்ட அனைவருக்கும் எங்களின் நன்றிகளும் வாழ்த்துக்களும்…..

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert