வவுனியா பண்பாட்டுப் பெருவிழாவில் 13 துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டது அதில் திரைத்துறைக்காக மது சுதாவும்கௌரவிக்கப் பட்டார்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் இடம்பெற்ற 2019 ம் ஆண்டுக்கான பண்பாட்டுப் பெருவிழாவில் வடமாகாண அளவில் 13 துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களை வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கௌரவப்படுத்தி அவர்கள்சார் துறையில் அவர்களை ஊக்கப்படுத்தியிருந்தது.

அதில் திரைத்துறைக்காகவும் தொடர்ச்சியான அயராத திரைச் செயற்பாட்டுக்காகவும் மது சுதாவும்கௌரவிக்கப் பட்டார்

இத்தனை வருட காலம் வெட்டி ஓடித் தவிர்த்துக் கொண்டிருந்த என்னை இரு கலாச்சார உத்தியோகத்தர்கள் சிக்குப்பட வைத்துவிட்டார்கள். ஆவணச் சேகரிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கு உதவிய சிவஞான சீலன் மற்றும் செல்வசுகுணா ஆகிய கலாச்சார உத்தியோகத்தர்களுக்கும். எனக்கு ஊக்கம் தந்து என்னோடு பயணிக்கும் என் அன்பு உறவுகளுக்கும் பெரு நன்றிகள்