விழிகளில் தெரிகிறதே

உலகமே விழிகளில்
தெரிகிறதே
உள்ளத்தில் வேரினை
பதிக்கிறதே
உதட்டிலே இதழ் வந்து
நனைகிறதே
உணர்வுக்கு ஏதும்
புரியவில்லையே
வலியோடு பூக்கள்
பூப்பதில்லையே
யாரும் இசை கொண்டு
பூவைப் பறிப்பதில்லையே
தூவுகின்ற இசைச்சாரல்
அடி மனசை தீண்டலையே
பேசுகின்ற வார்த்தைகளில்
அன்பு போதவில்லையே
வசந்தங்கள் விதையிட்டு
முளைப்பதில்லையே
கருங்கல்லிலே செடி வளர
எப்போதும் நினைப்பதில்லையே!

கவிஞைபாமினி சத்தியமூர்த்தி