வெளிநாடு..!

அம்மாவின் அழுகையதை ஆற்ற முடியல
அப்பாவின் வார்த்தைகளும் அங்கே புரியல
அண்ணனோ பார்வையதை கடந்து எதுவும் பேசல
ஆசை தங்கையின் பாச மொழிகளை அமைதியாக பார்க்க முடியல
காதலியின் கண்ணசைவினையும் கடக்க தெரியல
ஏன் எதற்கு என்று எதுவுமே தெரியாத பெருங் கனவுப் பயணமிது!!

கடைசி பிள்ளை கைகளை பற்றி பிடித்து கதறி அழுத தருணம்..

கட்டிய மனைவியிடம் கடைசி முத்தத்தை வாங்கி 
எட்டி எட்டி அவள் முகம் பார்த்தபடியே நுழைவு வாசலை கடந்த நிமிடம்..

கூடி ஆடி கும்மாளமிட்டு 
பாதி உயிராய் பழகிய நட்பு குலைந்த பொழுதை 
குற்றுயிராய் கடந்து வந்த பயணம்..

கடவுச்சீட்டு எடுத்து
கட்டார் எயார் லைன்ஸ் பிடித்து
கட்டுநாயக்கா கடந்து – உறவுகளை
எட்டியும் பார்க்க முடியாத 
எங்கோ ஒரு தேசத்தில் வந்திறங்கும்போதே வெளிநாடு 
என்னவென்று புரிகிறது!!!

 ✍?பவளம்.