இன்ப வலி.. ஆண்டுகள் அழகாய் நகர்கின்றது .


இல்லற பந்தத்தின்
இன்ப உச்சத்தில்
இனிதாய் கிடைத்த
இவள் பெரு வரம்…..!
விரல் பிடித்து
நடை பழக்கி
உடை உடுத்தி
உயிரோடு ஒன்றாகி
இதயத்தின் இடுக்கில்
இதுவரை இனித்தவள்..!
காலம் உருண்டது
கடமை விரிந்தது
திரும்பி பார்க்கின்றேன்
25 வருடங்கள்.
நேர்த்தியாகி
பூர்த்தியான போதும்.
எப்படி சாத்தியமனது..
நேற்றுப் போல்
நினைவோடு
நிலைக்க என்
முதுகேறி சவாரி
செய்த மகள்
21.08. 2016 இல்
இல்லற சவாரிக்கு
தனக்கான வரன்
தேடி கரம் பிடித்து
இரு மனங்களின்
ஒருங்கிணைப்பில்
இணைகின்றாள்.
இன்ப வலி என்னை
சூழ்ந்தாலும் இதய
துடிப்பின் ஒலியில்
இரைச்சல் உரக்க
கேட்காமல் இல்லை.
மாற்றங்கள் இன்றி
வாழ்வில்லை.
சொல்லோடு நில்லாமல்
செயலாகும் அன்பு நிலை
உருவானாலும்
குமரி நீயும்
என்றும் குழந்தையடி.
வாழ்வை வென்றிட
வாழ்த்துகின்றேன்..!