கனவுகள் கலைந்தும்
நினைவுகள் குலைந்தும்
நிம்மதி அலையின்
ஆர்ப்பரிப்பில் ஆனந்தம்.
ஏகாந்த வளைவுகளில்
சுகந்தம் வீசும்
மலர் வளையங்களுடன்
எனை ஆட்கொண்டவன்..
வாழ்க்கை ஒரு
வட்டமா?கட்டமா?
மாறாக ஆட்டமா?
நித்த போராட்டமா?
விடையறியாத
வினாவான போதும்
போராடி ஜெயிப்பதில்
ஈரடி குறலின் வெற்றி.
தோல்விகளில்
துவண்டவன் நிமிர்வதில்லை.
வெற்றிகளின் கனத்தை
காவுகின்றவன்
எழும்பியதாய் சரிதிரமில்லை..
நம்பிக்கை மூல தனம்.
தும்பிக்கை பலமாக
கைகள் பலம் இருக்க
காதலும் வாழ்தலும் வெற்றியே..
ஆக்கம்.கவிஞர்தயாநி