வசந்த சித்திரையே வருக ! கவிஞர்✍ ஜெ. தமிழரசி ✍

வசந்த சித்திரையே வருக
சீர் கொண்டு சிறப்பாக
வரும் சுபகிருது வருடத்தை
அன்புடன் வரவேற்போம்….!

புத்தாண்டு சித்திரை
புதுக்கணக்கு தொடங்கும் மாதம்
புதுமையான பெண்ணிவள்
புத்தின்பம் தரும் காலம்….!

கோடை மழை பொழிந்து
குளிர்விக்கும் காலம்
குற்றால நீர் அருவியாய்
கொட்ட வரும் காலம்….!

மாமரத்துக் கனி குலுங்கி
சுவையூட்டும் காலம்
வேரில் பழுத்த பலா
வீதி வரும் காலம்….!

வாசமல்லிப் பூ மலர்ந்து
மணம் பரப்பும் காலம்
வெள்ளரிப் பழம் பழுத்து
விற்க வரும் காலம்….!

விளாங்கனி கண்டு
களிக்கின்ற காலம்
வசந்தங்கள் தொடங்கும்
நல்லினிய மாதம்….!

சித்திரைப் புத்தாண்டே
வளமான நல்வாழ்வு எல்லோர்க்கும்
அமைந்திட வருக வருகவே
நலம் தருக தருகவே….!

✍ ஜெ. தமிழரசி ✍

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert