அன்புள்ள பொன்னண்ணாவுக்கு அகவை 80

”இந்த ஆண்டு எனக்கு அகவை 70 என்றேன். எனக்கு 80 என்றீர்கள்… முகம் பார்க்காமலே என்மீது பாசம் வளர்த்தீர்கள்… அது தமிழின்மீது நீங்கள் கொண்டிருந்த பாசத்தால் விளைந்தது. பூவரசுமீது உங்களுக்கு அதீத பிரியம். இந்த ஆண்டு உங்கள் 80வது அகவையில் உங்களைச் சந்திக்க மனக்கணக்குப் போட்டிருந்தேன். அதற்குள் மறைந்துவிட்டீர்கள்: ஆனாலும் இன்னும் நீங்கள் எங்களுடன் தான் இருக்கிறீர்கள் என்று உணர்கிறேன்.தமிழுக்கும் சமயத்துக்கும் நீங்கள் ஆற்றிய பணிகள் காலகாலத்துக்கும் உங்களை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். உங்கள் ஆன்ம சாந்திக்காய் இறைவனைப் பணிகிறேன். – உங்கள் அன்பில் கலந்த தம்பிகளில் ஒருவனாய் இந்துமகேஷ்.