அர்த்தமில்லாத சுதந்திர தினம்!

 

வெட்கமில்லாமல் வீனே நீங்கள்
வெட்டியாய் இருந்து முகப்புத்தகத்தில்
தட்டி விடாதீர் சுதந்திர தினம் பற்றி !

அச்சமில்லாமல் எம்மினத்தை
அழித்துவிட்டு பின்
திட்டமிட்டு
இனக்கலப்புடன்,
அபகரிப்பை ,
ஆள் கடத்தலை,
புத்தர் புதுப் புது இடத்தில் தோண்றல் செய்கின்ற
நாடு சுதந்திர நாடா……..?

கொத்துக் கொத்தாய்
உலக நாடும் இணைந்து
நாம் கொடுத்த உயிர்களுக்கு கணக்குமில்லை!
கொண்டு சென்ற
இளைஞர், 
யுவதிகள், 
வரவில்லை,
பின் எப்படி நடக்குது சுதந்திரதினம்…?

பிடித்தகாணிகள் விடவும் இல்லை
பின் தங்கியவாழ்கைக்கு நல் வழியும் இல்லை
அதனால் சுதந்திரம் என்பது எமக்கு  இல்லை

சுற்றம் மகிழ நம் வாழ்வதும் இல்லை
பின் எப்படி நடக்குது சுதந்திரதினம் …?

ஈழக்கவி