அளவேது…கவிதை கவிஞர் தயாநிதி

இசையால்
வசமாகாது
இருத்தல்
இயலாதது..

ஆற்றலுக்கு
அளவேது
ஆனந்த ராகத்துக்கு
எல்லைகளேது…?

புவியீர்ப்பினை
விஞ்சியது
உலகில்
இசையீர்ப்பு…

இசைக்கு
இனமேது
மொழியேது
ரசிக்காத
மனம் ஏது.?

குளப்பம்
கோபம்
சங்கடம்
சபலம் தீர்க்கும்
அரு மருந்து இசை.

உணர்வில்
உணர்ச்சியில்
உள்ளத்தில்
ஊடுருவும்
சக்தியானது.

ஆத்மாவின்
அருகருகே
அமரக் கூடியது
ஆண்டவனையும்
ஆட்கொள்ளும்
அரு விருந்து…

 

ஆக்கம் கவிஞர்தயாநிதி