அழகிய வரம்…!கவிதை கவிஞர் தயாநிதி

வாழ்வின்
அத்தியாயம்.
ஆனந்தத்தின்
அத்திவாரம்..
அழகிய
காப்பியம்..!

இனிதான
இறை வரம்.
நிறைவான
உரம்..
என்னை
பிரதிபலித்தும்
தன்னை
ஒப்புவிக்கும்
விம்பம்
பிம்பம்..!

காலக் கண்ணாடி.
முன்னாடி
நின்று என்
முழுமையை
எழிமையை
ஒப்பனையை
கரிசனையாக
காட்டும்….
ஒப்பற்ற ஜீவன்..!

பின் தொடர்ந்த
நிழலும்
ஒட்டியிருந்த
உயிரும்
ஓடி மறையும்
ஒரு நாள்…..
என்றுமே
விலகாதது
உண்மை நட்பு..!..!

ஆக்கம் கவிஞர்தயாநிதி