இ(ய)ந்திரன்..

இசைக்கு
இவன் ஒரு
இயந்திரன்.
முகநூலுக்கு
மூத்தவன்…

முத்தமிழுக்கு
வாயத்தவன்.
இசை இவனுக்கு
ஞானம்.தினம்
இயங்குவதில்
இந்திரன்…

ஆற்றலின்
பலத்தால்
பலர் மனங்களில்
வாழும் மந்திரன்.
இசை நுணுக்கத்தில்
தந்திரன்..

வரிகளை
தனதாக்கி
தாளக் கட்டுக்குள்
செருகி பாடலாக்கி
வான் பரப்பினை
ஊடறுக்கும்
உன்னதன்…

மரங்களை
செடிகளைக்
கொடிகளை
முற்றத்து மா பிலா
வாழையென
பாடித் தீர்ப்பவன்.

மாவீரர் புகழ்
பாடும் பாவலன்
இசையால்
இறைவனையும்
வசமாக்கும்
நாயகன்..

பாரா முகமாய்
யார் இருந்தாலும்
சோராமலும் சோரம்
போகாமலும்
போராடும் கலை
யாசகன்…trt
வானொலியில்
பகுதி நேர ஊழியன்.

இமயம்
தொடும் நம்
கலைஞனை
நாமும் வாழ்த்தி
பெருமை கொள்வோம்.
வாழ்க நிரந்தரம்
வாழிய வாழியவே…

ஆக்கம் கவிஞர்தயாநிதி