ஈழத்துக் கலைஞர்களின் படைப்பில் உருவான „அருள் தரும் அழகன்“ இசை இறுவட்டு எதிர்வரும் 28.10.2019 வெளியாக இருக்கிறது.

மயிலாடுதுறை – கிடங்கல், மேலத்தெரு (தென்னிந்தியா) அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்திற்காக ஈழத்துக் கலைஞர்களின் படைப்பில் உருவான „அருள் தரும் அழகன்“ எனும் இசை இறுவட்டு எதிர்வரும் 28.10.2019 (திங்கள்கிழமை) அன்று வெளியாக இருக்கிறது. இதில் அடங்கியுள்ள பாடல்களை இயற்றியவர் கோண்டாவிலூர் கவிஞர் என்.பிறேமசீலன் அவர்கள், தெய்வீக இசை புனைந்துள்ளார் கந்தரோடை எஸ்.செந்தூரன் அவர்கள், தெய்வீகக் குரலில் பாடியுள்ளார் கோண்டாவிலூர் N.நீதன் ஆட்ஸ் அவர்கள், இந்த இறுவட்டுக்கான அனுசரணையினை வழங்கியுள்ளார் S.விஜயபாரதி (சிற்பி) அவர்கள், தென்னிந்தியா.