ஊழ் வினை.


யார் யாரோ
விதைத்தது.
அறுவடையை
நாங்கள் சந்திக்கின்றோம்.
கோவில்
தடை
குளம் தடை
கும்பிட தடை
சம்பந்தம் தடை
சம பந்தியும் தடை..
எத்தனை
தடைகள்.
அத்தனைக்கும்
விடை ..
வியாபகமானது
கொரோனா..
கறுப்பு வெள்ளை
பார்த்தவனும்
அவன் இவன் என
வகுத்தவனும்

ஆவணக் கொலை
பாதகரும் இன்று
யார் தப்பினார்?
அழிவின் உச்ச
தாண்டவம் ஆரம்பம்
ஆணவம் அடக்கி
அனுசரித்தால் உனக்கும்
வாழ்வுண்டு. தவறின்
அடக்கம் பண்ணவும்
ஒருவரிலர்…உணர்.
படித்த பாடங்கள்
ஏராளம்.
புதுப் பாடங்கள்
தாராளம்.
உனக்கும் எனக்குமே
சமூக இடை வெளி..
இதுக்கு மேலும்
ஆணவம் எதுக்கடி
அந்தலை தெரியுதடி
வா அருகில்….

ஆக்கம் கவிஞர் தயாநிதி