எங்கே எதிர்காலம்


பள்ளிப் பருவத்து பாலகரை
வதைத்து சிதைக்கும்
வக்கிர புத்தியை
அழித்து நீதி சொல்ல
யார் வருவார்??
மனம்
நொந்து வெந்து
எழுதினாலும்
அழுது கதறி நிற்கும்
அந்தப் பொற்றோர்க்கு
ஆறுதலுக்கு வார்த்தைகளை
அள்ளிக் கொடுப்பது எப்படி??
அரசே
சமூகப் பிரதிநிதிகளே
ஆசிரியர்களே
அக்கறையுள்ளவர்களே
ஊடகங்களே
செய்தியாக பார்த்துவிட்டுப்
போகாதீர்
செயலாற்றுங்கள்
உங்களிடமே
இவர்களின் எதிர்காலம்
இன்றே துணியுங்கள்
இனியும் ஒரு கொடுமை
வேண்டாம்

 

ஆக்கம் சுபாசினி