எட்டும் தூரம் நடக்க வழிகொடுப்போம்

எழுந்து நிமிரும் உன் தேகம்
வீழ்ந்து பணியா பெரு வீரம்
சுழன்று திரியும் உன் வேகம்
தாழ்ந்து செல்லா பேரின்பம்

வாழ பிறந்த வாழ்வுதனை
பாதியாக்கிய காலனும் பாவிதான்
ஆளப்பிறந்த அற்புதரே
வாழ்க்கை உனக்கு சாகசம் தான்

எவனும் எவரும் எதுவும் பேசலாம்
புலரும் பொழுதும் தாக்கலாம்
மலரும் வாழ்வும் வெறுக்கலாம்
மகிழ்ச்சி உன்னை மறுக்கலாம்
எதையும் கண்டு வருந்தாதே
இறைவன் கொடுத்ததை மறக்காதே

உனக்கு உன் மனம் உதவியடா
இருக்கும் வரையே அனுபவிடா
மனக்கும் வாழ்வும் ஒளிருமடா
புது மலர்ச்சி உன்னில் தோன்றுமடா
நானும் நீயும் நண்பனடா
பிறகு எதற்கு கவலையடா

தொல்லை அழிக்க பிறந்தவர் நாம்
எட்டும் தூரம் நடக்க வழிதருவோம்
முயன்று செல்ல சபதமிடுங்கள்
புது வாழ்வு புலரும் மகிழ்ந்திருங்கள்

தே.பிரியன்
என் உறவுகளுக்கு இந்நாளின் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின இனிய வாழ்த்துக்கள்