எது காதல்…?கவிதை மன்னார் பெனில்

உன்னை
நினைத்துக்
கொண்டிருந்தேன்
என்னவளைக்
கரம்பிடித்தபின்னரும்
ஏனோ தெரியவில்லை

என்னவள்
சொல்கிறாள்
என்னைவிட
உங்களை அவள்
அன்போடு பார்த்துக்
கொள்வாளானால்
இன்முகத்தோடு
அனுப்பிவைக்கின்றேன்
உங்களை வருந்த
விடுவாளானால்
என்னால் அவள் சாவது
திண்ணம் என்கிறாள்

மன்னார் பெனில்