என் உயிர் ஏங்குது!-வன்னியூர் இனியவள்,

ஏமாற்றம் மட்டும் வாழ்வாக
என் ஓடம் கடலில் தனியாக
வேதனைகள் எல்லாம் எனைச் சேர
சாதனைகள் யாவும் தூரமாக

பாசம் நெஞ்சில் வற்றி விட
வேசம் என்னைச் சுற்றி விட
வாழ்வே எனக்கு கானலாக
தேகம் எரியுது அனலாக

பேதையென எந்தன் நெஞ்சம் வெடிக்க
மேதையரை எண்ணி ஏங்கித் தவிக்க
கனவுகள் எல்லாம் வீணாக
நனவுகள் ஏது எனக்காக

ஆசைகள் எல்லாம் தொலைவாக
என் ஆன்மா மெல்ல நலிவாக
கண்களில் ஏக்கம் நீராக
என் உயிர் ஏங்குது உடல் நீங்க

என் உயிர் ஏங்குது!-வன்னியூர் இனியவள்,