எறிகணை.

உன் கண்கள்
மேற் கொண்ட
வலிந்த தாக்குதலால்
தடுமாறினேன்..

உன் உதட்டோர
புன்னகை
ஏவுகணையானதடி
ஏன் இந்த
போர் முனைப்பு…

வீசிய விழி
வியூகத்தால்
நாணமெனும்
முன்னரங்க
காவலரண் துகளானது.

பொறுமை தன்
எல்லைக் கோட்டை
தகர்த்தது.ஆண்மை
அறை கூவலை ஏற்றது..

காதல் தன்
வறுமைக் கோட்டை
தாண்டி போர் இலக்கு
தொடங்கியது.

யுக்திகள்
கவிதையெனும்
எறிகணை தாக்குதலால்
மனப் பரப்பினை
ஈரமாக்கியது..

எண்ணமெல்லாம்
உன் நினைப்பானது
வண்ணமய வாழ்வில்
வசந்தம் வீசிட தமிழ்
துணை நின்றது
காதல் வென்றது…..

மூத்தகலைஞர் கவிஞர் ரி.தயாநிதி