கம்பீரம்…

எழுத்திலும்
பேச்சிலும்
அறிவிப்பிலும்
எழுச்சியிலும்
கம்பீரமானவர்.

வானொலி
மேடை என
அசத்தியவர்.
ரி ஆர் ரி abc வானொலிகளில்
முத்திரை
பதித்தவர்.செல்வி
எனும் நவறட்ன ராணி
சிவலிங்கம்.

எனது வானொலி
நாடகங்களில்
பாத்திரங்களாக
வாழ்ந்தவர். எடுத்த
காரியங்களை
சிறப்புற முடிப்பவர்.
தமிழ் உணர்வும்
தேசபக்தியும் அளப்பரியன.

ஒப்பனைக் கலையில்
வல்லவர்.நட்பினை
மதிப்பவர்.திடமானவர்.
தீராத நோய் கவ்விய போதும்
நம்பிக்கை தளராதவர்
நலம் பெற்று நம்மோடு
கலை வானில் அவர்
குரல் ஒலித்திட விரைவில்
வரவேண்டும் என வாழ்த்தி
வரவேற்போம்.வாழியவே.

ஆக்கம் கவிஞர்தயாநிதி