கவிஞன்..



விரல்
வழி அரங்கேறும்
வரிகள் திரு
வாய் வழி மொழிவதில்லை.

விரசமின்றி
வரையும்
விரல்களுக்கு
ஏனிந்த நாணம்.

காதலின்றி
வாழ்வது
மானிடன் செய்த
பாவமன்றோ.

ஓசையின்றி
பேசுவது
ஆசை நெஞ்சின்
தர்மமன்றோ.

காத்திரமான
நேசிப்பில்
பாத்திரங்களாகி
படைப்பவனே கவிஞன்.

சலனங்கள்
ஏதுமின்றி
சபலங்கள் கடந்த
ஞானிகள்..

கவிஞர்களுக்கு
காதல்
கடும் தவம்
நித்தம் பிரசவம்.

கனவுகளின்
எச்சத்தில் சுபீட்ஷம்
நினைவுகளின்
விருட்ஷம் கவிதை.

ஆக்கம் ரி .தயாநிதி