சுவிஸ்சில் நடைபெற்ற பொங்குமாருதம் நிகழ்வில் ஊடகவியலாளர் முல்லைமோன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்

ஊடகத்துறையில் மூத்த கலைஞராகத் திகழ்ந்து வரும மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் ஊடகவியலாளர் முல்லைமோன் அவர்கள் (05.10.2019) சுவிஸ்சில் நடைபெற்ற பொங்குமாருதம் நிகழ்வுக்குஅழைக்கப்பட்டு அவருக்கான
கெளரவத்தை வழங்கியுள்ளது சிறப்பு,

ஐரோப்பா நாடுகள் எங்கும் தன் குரல் வளத்தால் அறிவுப்புத்துறையில் 47 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் இவர் மேடை நிகழ்வுகள் மட்டுமல்ல தொலைக்காட்சி, வானொலி நிகழ்வுகளிலும் தொகுப்பாளராக சிறந்து பணி புரிந்தவர் ,புரிந்து வருபவர் ,

எமது கலைக்காக எமது கலைஞர்களின் தனித்துவத்துக்காக பயணிக்க ஒரு தொலைக்காட்ச்சி வேண்டு என்ற நோக்கு எம்மிடம்எழுந்த போது STS தமிழோடு இணைந்து நமது கலைக்காகவும், நமது கலைஞர்கள் சிறப்புக்காகவும் தன்பணிதொடரும் இவர் பணி தொடர வாழ்துகின்றவர்களுடன் நாமும் வாழ்தி நிற்போம்