சேதாரம்…!

முப்பாட்டன்
விதை போட்டான்.
ஆதாரம் மட்டும்
அவன் நோக்கல்ல….

உன்னையும்
எண்ணிய அவனது
தொலை நோக்குடன்
மண்ணையும்
விண்ணையும்
காத்தலை தன்
பணியாக்கினான்..!

பசுமை படர்ந்தது
இனிமை பிறந்தது
இயற்கை சிரித்தது
வளங்கள் பெருகியது.
மனது நிரம்பியது..

இன்று நீ
மதிக்க மறந்தாய்
தெளிவிழந்தய்
அழிவினை
ஆட்கொண்டாய்.
சேதாரம் உனக்கே.!

நிழல் தந்த
என்னையே
நிர்மூலமாக்கி
நிம்மதி இழந்து
கதறுகின்றாய்.
அடுத்த தலைமுறை
தளைக்குமா?
நில் கவனி அவதானி.!

ஆக்கம் கவிஞர்தயாநிதி