தெய்வீகம்…கவிதை கவிஞர் தயாநிதி

புரியாதது
ஏதுமில்லை
புரியாமல்
வாழ முனைவதால்
வாழ்க்கை
முடிவதில்லை…

கருவாகி
உருவாகி
தெரிவாகி
விதையாகி
முளையாகி
ஆரம்பம்….

பயிராகி
கதிராகி
விளைந்து
அறுவடையாகி
பயனாகி
ருசிக்கின்றது
வாழ்க்கை..

நலன் காத்து
பலம் சேர்த்து
புலன் கொண்டு
பலன் பெற்று
வாழ்வதே
இல்லற பேரின்பம்..

கட்டியும்
வரலாம்
கட்டிய பின்னரும்
வரலாம்
காதல்..
கெட்டித்தனம்
உள்ளவன்
கெட்டியாக
பற்றுகின்றான்…

அகலக் கால்
ஊன்றாது
அற்புதமாக
உலகை ஆள்
உவகை பெருகும்
உள்ளம்
கோவிலாகும்.
காதல் தெய்வீகமாகும்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி