நான் சிறுகதை எழுதி பதினைந்து வருடமாகி விட்டது புதிய நந்தவனம் சந்திரசேகரன்

நான் சிறுகதை எழுதி பதினைந்து வருடமாகி விட்டது தினத்தந்தி ,மாலை மலர் ,தமிழ் முரசு , மற்றும் சிற்றிதழ்கள் என பல இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருகிறேன்.இதழியல் பணியில் முழுமையாக ஈடுபட்டதால் சிறுகதை எழுதுவதை தொடர முடியாம் போய் விட்டது .ஆனால், சிறுகதை வாசிப்பதை நிறுத்தவில்லை கடந்த பதினைந்து வருடத்தில் ஆயிரம் சிறுகதையாவது வாசித்திருப்பேன். மீண்டு சிறுகதை எழுத வேண்டும் என்ற ஏக்கமும் ஆர்வமும் நீண்ட நாட்களாக எரிந்து கொண்டே இருந்தது

நிறைய கதைகளுக்கான பதிவுகள் மனதிற்குள் ஊறிக் கொண்டே இருந்தாலும் எழுதுவதற்கான சூழல் அமையாமலே இருந்தது.இன்று தான் அதற்கான சூழல் அமைந்தது .அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.30 க்குள் „வலி “ என்ற சிறுகதையை எழுதி முடித்தேன் 2020 ல் எனது சிறுகதை நூலை வெளியிட வேண்டும் என்ற உறுதியோடு சிறுகதை எழுதத் தொடங்கியுள்ளேன்