நியாயமானது…கவிதை கவிஞர் ரி.தயாநிதி

உன்
பார்வையில்
நிதானமும்
நியாயமும்
நிதர்சனம்….

என்
புரிதலில்
ஓராயிரம்
குற்றங்கள்
என் மிதும்
இல்லாமலில்லை…

நிர்க்கதியானது
நிர்கதியாக்கியது
தீர்வில்லா ஆய்வாகும்.
அவசரமாக
நடந்து முடிந்தது
பிரசவமும் தான்….

யாரோ இருவரின்
மன மகிழ்வின்
உச்சத்திலுன் உயிர்ப்பு
கலைக்காமல்
கலைந்ததால் பிறப்பு…

தெய்வங்களாக்குவர்
புராணங்களாக்குவர்
பண்பாடித் துதிப்பர்
நீ மட்டும் விதிவிலக்கா
பார்வை நியாயமானது…

விரைவில்
புரட்சி பூக்கும்
பூலான் தேவியுமாகலாம்
ஜான்சி ராணியுமாகலாம்
வேலு நாச்சியாருமாகலாம்….

அனலாகு
நெருப்பாகு
பொடியாக்கு
அர்த்தம் விளக்க
விழி நீர் துடைத்தெழு..

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி