பசுமையடி..


கண்டதும்
ஏதோ கிறுக்கிட
தோன்றியது.
இது கவிதை
எனும் விந்தையடி…
எந்தையன்
நினைவில்
நீளும் நின்
பந்தம் புது
சொந்தம் தானடி..
ஓவியமே
உனை எண்ணினால்
வரிகளும்
முத்தாரமிடுமடி
காவியமும்
சிந்து பாடுமடி..
தாவியுனை
அணைத்து
தமிழூட்டி நான்
மகிழ பாவி
நீ மௌனச் சிறை
உடைத்து வாடி..
கவிதையின்
சாரம் அறிந்தால்
இதயத்தில் ஈரம்
சுரக்குமடி
நீ கடக்கும் பசுமை
வயல் போல்
மனசு நிறையுமடி..

ஆக்கம் கவிஞர்தயாநிதி