போராடு….



தோல்வியை கண்டு
கலங்காதே வெற்றிவரை
தொடர்ந்து
போராடு…
வெற்றிகளை கண்டு
ஆடாதே பெற்ற
வெற்றியை தக்க வைத்திட
போராடு..
ஏமாற்றப்பட்டால்
ஏங்காதே எதிர்த்து
நின்று போராடு.
நஸ்டப்பட்டால்
நகராதே நிதானமா
போராடு..
நக்கலடித்தால்
நடுங்காதே
சிரித்த படி நகர்..
பாறைகளின்
இடுக்கில் வளர்வது
செடியல்ல.அதன்
தன் நம்பிக்கை.
நம்பிக்கை
ஒன்று தான்
முதலில்லா முதலீடு.
தேன் கூட்டில்
இனிப்பது தேனல்ல
தேனீக்களின்
உழைப்பு..
கூட்டை உடைத்து
வெளி வரும்
குஞ்சுகளின் விடா
முயற்சி தான் உயிர்ப்பை
தக்க வைக்கின்றது..
மூச்சு விட்டால்
மட்டும் வாழ்வல்ல
முயற்சி எடுத்தால்
மட்டுமே வாழ்க்கை..

கவிஞர் ரி.தயாநிதி