மழலைப்பருவம்,


மீண்டும் ஓர்ஆசை
என் நெஞ்சில் உதயமானது
மழலையாக வாழ்ந்திட,

ஆசையுமில்லை மோசமுமில்லை – அது
ஆணவம் கொள்வது இல்லை
காசையு மெண்ணுவதில்லை – இதனால்
கவலைப்படுவதுமில்லை..

பிஞ்சுக் குழந்தை மனதில் – ஒரு
பேதம் வளர்வதேயில்லை
அஞ்சுதல் என்பதுமில்லை – அதை
வெறுப்பவர் இங்கே யாருமில்லை..

இவ்வளவு பெரிய உலகில் – துயர்

பிடித் அலைந்திடும் மக்கள் மத்தியில்
சின்னக் குழந்தையாய் மாறி
வாழ்ந்திட ஆசை…

கவலையின்றி கண்ணீரிற்றி
வலிகள் இன்றி பேதம் இன்றி
வாதம் இல்லா வாழ்க்கை
அது மழலையில் மட்டுமே
சாத்தியம் ஆனதே,…

வஞ்சமில்லாது துரோகம் தெரியாது
பொய்யில்லாத வாழ்க்கை வாழ
மீண்டும் ஓர் மழலையாக வேண்டுமே..
பாகுபாடில்லாமல் புன்னகையை
பரிசாக கொடுக்கும் மழலைபருவம் …

சூதுவாது இன்றி இதமான இதயம்
மகிழ்வோடு வாழ
மீண்டும் ஓர் மழலைப் பருவம்
வேண்டி துடிக்குதே என் உள்ளம்.
ஜெசுதா யோ